18 டிச., 2008

ஒரு பெண்ணின் குரல்...

காதை திருகுகின்றேன்...
கன்னத்தை கிள்ளுகின்றேன்....

மடி சாயும்போது
தலை கோதுகின்றேன்...

அதிகம் பேசும்போது
தலையில் கொட்டுகின்றேன்...

சில நேரம் ரகசியமாய்
ஏதேதோ கிசுகிசுக்கின்றேன்
உன் காதில்...

பலமுறை உன்னை
'வாடா போடா' உரிமையாய்
அழைக்கின்றேன்....

ஆனால் நேரில் பார்க்கும் போது
மட்டும் தலை நாணி புன்னகைக்கின்றேன்
எனக்குள்ளே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக