எங்கும் தமிழே பெயர் பலகை!
கண்ணில் படுவதெல்லாம்
கன்னித் தமிழ்ச் சொற்கள்!
செவி மடுப்பதெல்லாம்
செந்தமிழ்ச் சொற்கள்!
நீதிமன்றத்தில்
தமிழில் வழக்காடல்!
சட்டமன்றத்தில் தமிழில்
ஆளுனர் உரை!
பல்கலைக்கழகத்தில்
தமிழிலேயே பாடத்திட்டம்!
திரைபடங்களில்
தீந்தமிழ் உரையாடல்கள்!
இப்படி முழுதமிழனாக
வாழ்ந்து வந்தேன்!
நான் செய்ய வேண்டிய பணிகள்
அடங்கிய ஆங்கில கோப்புகளில்
தலை சாய்த்து கண்ணயர்ந்தவாறு!
- சிவக்குமார் நேதாஜி
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக