17 ஏப்., 2009

மாற்றான் வீட்டு மரணம் இல்லை

மின்னஞ்சலில் இலங்கை தமிழ் படுகொலை படங்கள்....
பார்ப்பதற்கு கொடுரமாய் இருந்தன....
------------------------------------------------------------------------
அந்த மின்னஞ்சல்
கோபத்துடன், என்னை
தலை நாண செய்தது...
----------
"என் உடன்பிறப்புக்கள்
உயிருக்கு போராட
நானோ சுகபோகம்
தேடி அலைகிறேனே!",என்று
தலை நாணுகிறேன்...
***
"சூடானது ரத்தம் மட்டும்தான்!?
ஆனால்
'செயலற்ற தசையானது
என் இதயம்!'", என்று
தலை நாணுகிறேன்
***
"இருதுளி கண்ணீர் தவிர
வேறுயேதும் செய்ய இயலாத
'சவமாய்' இருக்கிறேன்", என்று
தலை நாணுகிறேன்...
***
"உப்பிட்டு 'உண்ணுதல்'
ஏதும் என்னுள் எந்த மாற்றம்
தரவில்லை", என்று
தலை நாணுகிறேன்...
***
"வெறும் பேச்சில் மட்டும்
'தமிழினம்' உணர்வு கொண்ட
தலைவர்களை சார்ந்து இருக்கிறோமே!", என்று
தலை நாணுகிறேன்...
***
"தூரம் நின்று
வருந்தி நிற்க இது
மாற்றான் வீட்டு
மரணம் அல்ல"
***
அடக்கம் செய்துவிட்டு
அடங்கி போக நாம்
'கோழைக் குடியில்'
பிறக்க வில்லை...
***
---------------------------------------------------------------
- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக