14 ஏப்., 2009

அன்பிற்கினிய சித்திரை மகளே!

அன்பிற்கினிய சித்திரை மகளே!

'புத்தாண்டு' பதவி இழந்தாலும்
நீயே எங்கள் அரசாங்கத்தின் இளவரசி...


இந்தமுறையும்
நாடாள்வது யாரேனே நீயே
தீர்மானிக்க போகிறாய்...


நீ நெருப்புக்கூட்டுக்குள்
வாழும் சிட்டுக்குருவியா...


இல்லை சூரியனை
விழுங்கிவிட்ட பெருங்குருவியா?


நீ கடவுளின் அவதாரமா?
மரங்கள் எல்லாம்
மொட்டையடித்து
காணிக்கை தருகின்றன..


நீ மட்டும் தான்
வறட்சியில் பிறப்பெடுத்தாலும்
வளமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்....


உன்னாலே
ஆடி தனிமையானது
துணையிழந்து...


மனமுவந்து
உன்னை வரவேற்கிறேன்!!
'இந்த முறையேனும்
செங்கோல் ஆட்சி அமைதிடுகுக'!!!


நண்பர்களே!!!!

கரம் சேருங்கள்....
இணைந்து வரவேற்ப்போம்...


சித்திரை மகளை!!!



அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக