25 பிப்., 2009

சொல்லுங்கள்

யாரவது அவளிடம்

சொல்லுங்கள்

'அவளுக்கு என்னை

பிடிக்கும்' என்று!!!

- சிவக்குமார் நேதாஜி

3 பிப்., 2009

மலர் தூவுகிறாய்....

கடிதம் கொடுத்தேன்

கசக்கி எறிந்தாய்...

அலைபேசியில் அழைத்தேன்

பேசாது தவிர்த்தாய்....

நேரில் சொன்னேன்

முறைத்து நகர்ந்தாய்...


ஏன்

இன்று என் கல்லறையில்

எழுதிய காதல் வரிகளுக்கு

மலர் தூவுகிறாய்???

- சிவக்குமார் நேதாஜி