காவிரியே - நீ
குடகு மலையில் பிறந்தாய்
கல்லைத்தான் முத்தமிட்டாய்
கரைந்து விட்டது...
பாறை போன்ற மலைகளை என்ன செய்தாய்
பாதையாக்கி கொண்டாய்
உன்னை தடுக்க
கல்லாலே அணை கட்டினோம்
கல்லணையில் -அனாலும்
கடலை அடைந்தாயே..
அரசியலையும் ஆட்டி வைத்தவளே...
ஆடி 18 அன்று காட்சிதந்தவளே...
அட உழவனின்
வயிறும், வயலும் வாடுது...
வந்து விடு வரும் வருடம்
எதிர்பார்ப்பேன்
வாடகை கலப்பையுடனும்
வறண்ட நிலத்துடனும்
இவண்
வறண்ட நிலத்தில் ஒருவன்
சி.பிரபாகரன் M.Com., M.Phil.,
MUTHIYAMPALAYAM, TRICHY
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக